சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவசாயிக்கு 10 ஆண்டு ஜெயில்..!!

Read Time:2 Minute, 34 Second

201612240943305248_try-to-girl-molested-farmer-got-10-years-jail_secvpfவேலூரை அடுத்த நாகநதி கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ஏழுமலை (வயது 28) விவசாயி. இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி துத்திக்காடு பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை அதே பகுதியில் உள்ள ஏரிகரை பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதற்கிடையில் சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி கொண்டிருந்தனர். அப்போது சிறுமியை, ஏழுமலை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று துத்திக்காட்டில் இறக்கி விட்டு விட்டு தப்பி சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து, சிறுமி அவரது பெற்றோரிடம் கூறி அழுதாள்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வேலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுசூதனன் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் உள்பட 3 பிரிவுகளில் 13 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை 10 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 5 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நிவாரணம் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழுப்பை குறைக்கும் மாதுளம் சட்னி…!!
Next post ஒரே வாரம் தான்.. முகத்தில் உள்ள கருமை காணாமல் போகும்! இதை போடுங்க…!!