ரூ.1 கோடி கேட்டு குழந்தையை கடத்தி கொன்ற சிறுவர்கள்…!!

Read Time:3 Minute, 42 Second

201612260956585094_boys-killed-baby-carrier-asking-rs1-crore_secvpfமும்பையில் உள்ள நாக்படா பகுதியை சேர்ந்தவர் மும்தாஸ்கான். இவரது மகள் சுமிதாகான் (வயது 3).

கடந்த 5-ந்தேதி இரவு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சுமிதாகானை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தனர்.

இதற்கிடையே மர்ம நபர்கள் போனில் பேசினார்கள். அதில், குழந்தையை நாங்கள் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.1 கோடி தந்தால் குழந்தையை தருவோம், இல்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள்.

பின்னர் பேரம் பேசி ரூ.28 லட்சம் தருவதாக மும்தாஸ்கான் கூறினார். இதை கடத்தல்காரர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் குழந்தையை சொன்னபடி ஒப்படைக்கவில்லை. அதன்பிறகு போனும் வரவில்லை.

இதுசம்மந்தமாக போலீசார் தேடிவந்தனர். மும்தாஸ்கானுக்கு வந்த போன் எண்களை வைத்து பார்த்தபோது அது திருடப்பட்ட சிம்கார்டில் இருந்து வந்தது என்பது தெரியவந்தது. எனவே யார் கடத்தியது என்பது கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மும்தாஸ்கான் வீட்டு அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் சுமிதாகான் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பையில் பிணத்தை சுற்றி கட்டிடத்துக்குள் மறைத்து வைத்திருந்தனர். பிணம் அழுகி இருந்தது. ஆனால் பிளாஸ்டிக் பை சுற்றி இருந்ததால் துர்நாற்றம் வெளியே தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அருகில் ஒரு கடையில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, அந்த பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் சிறுமியை அழைத்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து அந்த 2 சிறுவர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சிறுமியை கடத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். சிறுமியை அழைத்து சென்று அவரது முகதில் குளோராம் மயக்க மருந்தை தடவி உள்ளனர். ஆனால் அதிக அளவு மயக்க மருந்து தடவி இருந்ததால் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வந்தது.

இதனால் பயந்துபோன அவர்கள் சிறுமியை செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் பிணத்தை கட்டிடத்தில் மறைத்து வைத்துள்ளனர்.

இதன்பிறகு தான் அவரது தந்தைக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பிடிபட்ட 2 பேருக்கும் 16 வயது ஆகிறது. அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தனர். சிறுவர்கள் என்பதால் அவர்களுடைய பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நத்தம் அருகே பழனிக்கு பாத யாத்திரை வந்த தந்தை-மகன் பஸ்மோதி பலி…!!
Next post கொதிக்கும் நீரில் துளசி மஞ்சள் கலந்து குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்…!!