5 ஸ்டார் ஓட்டலில் அமெரிக்க பெண் கற்பழிப்பு வழக்கில் நான்கு பேர் கைது…!!

Read Time:2 Minute, 26 Second

201612261948410582_us-woman-gang-torture-police-arrests-four-accused_secvpfஅமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அவர் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும்போது ஒரு கும்பல் அவரை இரண்டு நாட்கள் அறையில் அடைத்து வைத்து கற்பழித்தது.

மேலும், இதுகுறித்து வெளியில் தகவல் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், கற்பழிப்பு சம்பவத்தை படம் எடுத்து வைத்துள்ளோம். அதை பொதுமக்களிடம் பரப்பிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். பல மாதங்கள் கடந்தும் போலீசார் விசாரணையை முடுக்கி விடவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண்மணி, டெல்லி போலீசாரின் விசாரணையில் திருப்தியில்லை. கற்பழிப்பு கும்பலை அடையாளம் காட்ட தான் தயாராக இருக்கிறேன். இதற்காக இந்தியா வருகிறேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த அவர், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் தன்னுடைய புகாரை மீண்டும் தெரிவித்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயரை வெளியிட மறுத்து விட்டனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘சுற்றுலா வழிகாட்டு, டிரைவர், கிளீனர், ஓட்டல் ஊழியர் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளோம். அடையாளம் அணிவகுப்பு நடத்தும் வரை அவர்கள் பெயரை வெளியிட முடியாது’’ என்று கூறிவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஞ்சீபுரம் அருகே ஆட்டோ மீது பஸ் மோதல்: 6 வயது சிறுமி பலி…!!
Next post புரியாத புதிர் படத்துக்கு யு சான்றிதழ்…!!