கர்ப்பிணியின் வயிற்றை கிழித்த கொடூரம்: நடந்த விபரீத சம்பவம்…!!

Read Time:3 Minute, 44 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3பிரேசில் நாட்டில் திருமணமான தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலை சேர்ந்த Silva Pinto மற்றும் Fabio Luiz Lima ஆகிய தம்பதியினருக்கு திருமணமாக 3 வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை.

இந்நிலையில் Pinto கருவுற்றபோது அவரது வயிற்றில் இருப்பது குழந்தை இல்லை என்றும், அது கட்டி என்பதால் அதனை நீக்கிவிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படியே, அறுவை சிகிச்சையின் மூலம் Pinto வின் வயிற்றில் இருந்த கட்டி நீக்கப்பட்டது.

தங்களுக்கு குழந்தையே இல்லை என்ற கவலையில் இந்த Pinto மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர்.

அதாவது, வறுமையில் வாடும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு ஆடை உதவிகள் செய்வதாக கூறி வாட்ஸ் அப்பில் குரூப் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பலருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் தான் 7 மாத கர்ப்பிணி பெண்ணான, ரியான் இவர்களிடம் சிக்கியுள்ளார். ரியானை சந்தித்து ஆடையை வழங்குவதற்காக ரியோவில் உள்ள ரயில் நிலையம் சென்ற இத்தம்பதியினர், அவரை கடத்திக்கொண்டு தங்களது வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ரியான் 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று நினைத்துக்கொண்ட இவர்கள், கத்தியை எடுத்து ரியானின் வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்க முற்பட்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இந்த தம்பதியினர், இரண்டு சடலங்களையும் தங்கள் வீட்டில் புதைத்துவிட்டு, கத்தியை நீச்சல் குளத்தில் போட்டுள்ளனர்.

இந்நிலையில் ரியான் காணாமல் போய் 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தியதில், ரியோவில் உள்ள ரயில் நிலையத்தில் வைத்து ரியான், இந்த தம்பதியனர் பேசிக்கொண்டிருந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்துள்ளது.

அதனடிப்படையில், இந்த தம்பதியினரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில் மேற்கூறிய தகவல்கள் தெரியவந்துள்ளது.

இரட்டை படுகொலை மற்றும் சடலங்களை மறைத்து வைத்த குற்றத்திற்காக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெறும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாஆஆஆஆ பேய் சிரிச்சா கோரமா இருக்கும்னு சொல்றதுக்கு இதுதான் காரணமா இருக்குமோ…!! வீடியோ
Next post ஹாஃப் பாயில் உடம்பிற்கு நல்லதா?