உறவினரின் மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய சகோதரர்கள்…!!
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள், குழந்தையின் தாயான தமது உறவு முறை சகோதரரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக குடாஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கடந்த 21 ஆம் திகதி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். காலை வீட்டுக்கு வந்த கணவரின் சித்தப்பாவின் இரண்டு மகன்மார், அண்ணன் இருக்கின்றாரா எனக் கேட்டுள்ளனர்.
அவர் வேலைக்கு சென்றுள்ளதாக பெண் கூறியுள்ளார். அப்போது ஒரு சந்தேக நபர் குழந்தையை தூக்கி வைத்து கொண்டதுடன் மற்றைய சந்தேக நபர் குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.
பெண், தண்ணீர் கொண்டு வர சமையல் அறைக்கு சென்ற போது சந்தேகநபர் கழுத்தில் கத்தியை வைத்து கொலை செய்ய போவதாக கூறி அச்சுறுத்தி அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சந்தேக நபர் குழந்தையை தூக்கிக் கொண்ட பின்னர், மற்ற சந்தேக நபர் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாரிடமாவது கூறினால் , குழந்தையை கொலை செய்து விடுவதாக கூறி சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating