வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!!
Read Time:1 Minute, 20 Second
வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் 13 வது குறுக்குத்தெருவில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் 25வயதுடைய குடும்பஸ்தர் இன்று (11) பிற்பகல் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
நண்பனுடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்த நிலையில் அதே நண்பனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர். நண்பனை அடித்துக்கொண்றதாக சந்தேகிக்கப்படும் நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரியவருகிறது
குறித்த குடும்பஸ்தரின் தாய்இ தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி ஒரு குழந்தையுடன் நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.
சடலம் அவ்விடத்திலே காணப்படுவதுடன் பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating