எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி..!! (கட்டுரை)

Read Time:21 Minute, 35 Second

15196055_335207646861283_4781089136613679467_oபொறுப்­புக்­கூறல் பொறி­ முறை என்­பது மிகவும்
உணர்­வு­பூர்­வ­மான மற்றும் மிக இல­குவில் தீப்­பற்­ றிக்­கொள்­ளக்­ கூ­டிய விவ­கா­ர­மான ஒரு விடயம் என்­பதை நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். இந்த விட­யத்தை மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப் ­பு­ட­னுமே அனைத்து தரப்­பி­னரும் அணு­க­ வேண்டும். இந்த விடயம் தீப்­பற்­றிக்­கொண்டால் அர­சாங்­கத்தின் இருப்­ புக்கே பாத­கத்தை ஏற்­ப ­டுத்தும் என்­பதை புரிந்­ து­கொண்டே இந்த விட ­யத்தை நாங்கள் அணு­க­வேண்டும்

“தம்பி.. அர­சி­ய­ல­மைப்பு வரை­பைக்­காட்டி பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை இல்­லாமல் செய்யும் செயற்­பாட்­டையே முன்­னெ­டுக்­கி­றாங்கள், போற போக்க பார்க்­கும்­போது அப்­ப­டித்தான் தெரி­யுது. நாங்கள் என்ன செய்­யப்­போறம் என்­றுதான் தெரி­யாம இருக்­குது”” இவ்­வாறு இந்த பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விவ­கா­ரங்­களில் அக்­கறை செலுத்தும் பெரி­யவர் ஒருவர் அண்­மையில் கூறினார்.

இதே­வேளை “”இந்தப் பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தை வைத்து நியா­ய­மான அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை வலு­வி­ழக்கச் செய்­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நியா­ய­மான தீர்­வொன்றை வழங்கும் சாத்­தி­ய­முள்­ளது. எனவே அதனை நாங்கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்””

இவ்­வாறும் பெரி­யவர் ஒருவர் எம்­மிடம் சில தினங்­க­ளுக்கு முன்னர் கருத்து வெளி­யிட்டார். இந்த இரு­வ­ரி­னதும் கூற்­றுக்­களைப் பார்க்­கும்­போது ஏன் இவ்­வா­றா­ன­தொரு விட­யங்­களை இவர்கள் இரு­வரும் வெளி­யிட்­டனர் என்­பது குறித்து சிந்­திக்­க­வேண்­டிய தேவை ஏற்­ப­டு­கின்­றது.

அதா­வது அர­சாங்­கத்தின் மீது பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் அல்­லது இந்தப் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்­டுடன் அக்­க­றை­யுள்ள தரப்­பினர் நம்­பிக்கை இழந்­து­விட்­ட­னரா? அல்­லது அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மக்­களின் நம்­பிக்­கையை சிதைக்கும் வகையில் அமைந்­தி­ருக்­கின்­ற­னவா? இவ்­வாறு பல்­வேறு கேள்­விகள் மக்கள் மத்­தியில் எழு­கின்­றன. அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையில் மக்­களை ஏமாற்­றி­விடும் என பாதிக்­கப்­பட்ட மக்கள் கரு­து­கின்­ற­னரா? இந்த விட­யத்தில் என்­னதான் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது? இது­போன்ற விட­யங்கள் விவா­திக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

மேலும் தற்­போது அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தை ஏன் இந்த விட­யத்­துடன் கொண்­டு­வந்து முடிச்­சுப்­போட முயற்­சிக்­கின்­றனர் போன்ற கேள்­வி­க­ளுக்கும் விடை­காண வேண்­டி­யுள்­ளது. தற்­போ­தைய நிலை­மையில் அர­சாங்கம் பத­விக்கு வந்து இரண்டு வரு­டங்கள் நிறை­வ­டைந்­து­விட்­டன.

அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து குறு­கிய காலத்­தி­லேயே இந்தப் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்­டுக்­க­ளான அத்­தி­பாரம் இடப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் அத்­தி­பாரம் போட்­டப்­பட்­ட­தை­போன்ற தோற்­றப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் இது­வரை பொறி­மு­றைக்­கான செயற்­பா­டுகள் முழுமை அடை­யாமல் இருக்­கின்­றன. அதா­வது எங்கே பொறுப்­புக்­கூறல் விட­ய­மா­னது வெறும் பேச்­ச­ளவில் மட்டும் இருந்­து­வி­டுமா? அல்­லது உண்­மை­யி­லேயே செய­லு­ரு­வாக்கம் பெறுமா? என்­பன குறித்தும் தீவி­ர­மாக ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

பொறுப்­புக்­கூறல் பொறி­முறை என்­பது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான மற்றும் மிக இல­குவில் தீப்­பற்­றிக்­கொள்­ளக்­கூ­டிய விவ­கா­ர­மான ஒரு விடயம் என்­பதை நாம் அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். இந்த விட­யத்தை மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­ட­னும் அனைத்து தரப்­பி­னரும் அணு­க­வேண்டும். இந்த விடயம் தீப்­பற்­றிக்­கொண்டால் அர­சாங்­கத்தின் இருப்­புக்கே பாத­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதை புரிந்­து­கொண்டே இந்த விட­யத்தை நாங்கள் அணு­க­வேண்டும்.

அர­சாங்­கத்தை பொறுத்­த­வரை கடந்த இரண்டு வரு­ட­கா­லத்தில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்ற குற்­றச்­சாட்டை முன்­வைக்க முடி­யாது. பல்­வேறு வழி­களில் அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்­டிலும், ஏனைய விட­யத்­திலும் முன்­னேற்­றத்தை காட்­டியே வந்­தி­ருக்­கின்­றது.

இதனை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் தற்­போது தென்­னி­லங்­கையில் நடை­பெறும் சில நிகழ்­வு­க­ளையும் அத­னை­யொட்­டிய கடும்­போக்­கு­வாத சக்­தி­களின் எதி­ரொ­லி­யையும் பார்க்­கும்­போது எங்கே பொறுப்­புக்­கூறல் செயற்­பாடு என்­பது சாத்­தி­ய­மா­னதா? என்றும் பாதிக்­கப்­பட்ட மக்கள் கேட்­கின்­றனர்.

பொறுப்­புக்­கூறல் விசா­ரணை என்ற வார்த்­தையைப் பயன்­ப­டுத்­தும்­போதே கடும்­போக்கு வாதிகள் அதனை மிகப்­பெ­ரி­ய­தொரு குற்­ற­மாகக் கருதி விமர்­சனம் செய்ய முயற்­சிக்­கின்­றனர். இது பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை.

குறிப்­பாக பாது­காப்பு தரப்­பி­னரை விசா­ரிப்­ப­தற்கு முயற்­சித்­தாலே அது ஒரு பாரிய பின்­வி­ளைவை ஏற்­ப­டுத்­தி­விடும் என்ற அச்சம் அர­சாங்­கத்­திடம் இருப்­ப­தாக தெரி­கின்­றது. இந்த நிலையில் அர­சாங்­க­மா­னது தற்­போது உரு­வாக்கிக் கொண்­டி­ருக்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்­திற்கு அதிக முக்­கி­யத்­து­வத்தை வழங்கி இந்த பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டை வலு­வி­ழக்க செய்­து­வி­டுமா என்ற சந்­தேகம் ஏற்­ப­டு­கின்­றது.

முதலில் புதிய அசி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தில் என்ன நடக்­கின்­றது என்று பார்ப்போம். அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­கா­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்கம் உண்­மை­யி­லேயே பாரிய அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­வ­தாக தெரி­கின்­றது. இதனை சில இடங்­களில் தமிழர் தரப்பும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. விசே­ட­மாக அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பை உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதன் கீழ் பிர­தான வழி­ந­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது மேலும் ஆறு உப­கு­ழுக்­களை நிய­மித்து பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக ஆராய்ந்­து­வ­ரு­கின்­றது.

அதன்­படி குறித்த ஆறு உப குழுக்­களும் தமது அறிக்­கை­களை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்­ளன. அத­னைத்­த­விர பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது மூன்று முக்­கிய விட­யங்கள் குறித்து ஆராய்ந்து இன்னும் சில தினங்­களில் அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்­ளது. தேர்தல் முறை மாற்றம், இனப்­பி­ரச்­சி­னைக்­கான அதி­கா­ரப்­ப­கிர்வு, மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்றி அமைத்தல் போன்ற மூன்று முக்­கிய விட­யங்கள் குறித்து பிர­தான வழி­ந­டத்தல் குழு ஆராய்ந்து வரு­கின்­றது.

இதில் தற்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான பிர­தான வழி­ந­டத்தல் குழு ஆராய்­கி­றது. இந்த 21 பேர் கொண்ட குழுவில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற அனைத்து கட்­சி­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் இடம்­பெற்­றுள்­ளனர். தற்­போது இனப்­பி­ரச்­சினைத் தீர்வு விவ­கா­ரத்தில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராய்­கின்­றது.

குறிப்­பாக முழு­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு, காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களை மாகாண சபை­க­ளுக்கு வழங்­குதல், சமஷ்டி மற்றும் ஒற்­றை­யாட்சி என்ற பதங்கள் தவிர்த்து புதிய முறை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­துதல் போன்ற விட­யங்கள் பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் விரி­வாக ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் முக்­கிய கோரிக்­கை­யான வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் மாறு­பட்ட விட­யங்கள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கி­றது.

விசே­ட­மாக வடக்­கையும் கிழக்­கையும் இணைக்­காமல் இரண்டு மாகா­ணங்­க­ளி­னதும் சுகா­தாரம் மற்றும் கல்வி விட­யங்­களை இணைப்­பது தொடர்பில் பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக தெரி­கி­றது. இதில் இன்னும் இறு­தி­யான முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் இம்­முறை புதிய அர­சி­ய­ல­மைப்பில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­வதே தமிழ் பேசும் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிகவும் தீர்க்­க­மான விட­ய­மாகும். அந்த வகையில் விரைவில் இது­ தொ­டர்­பான விட­யங்கள் முன்­வைக்­கப்­பட்டு பிர­தான அர­சி­ய­ல­மைப்பு வரைபு மார்ச் மாதம் அளவில் வெளி­வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் விவ­கா­ரத்தில் இதுவே தற்­போ­தைய நிலை­மை­யாகும். மறு­புறம் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை நிலைமை எவ்­வாறு இருக்­கின்­றது என ஆரா­ய­ வேண்­டி­யுள்­ளது. பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையைப் பொறுத்­த­வ­ரையில் அர­சாங்­க­மா­னது உள்­ளக விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுப்­ப­தாக சர்­வ­தே­சத்­திற்கு உறு­தி­ய­ளித்­துள்­ளது. கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட மனித உரிமைப் பேர­வையின் இலங்கை தொடர்­பான பிரே­ர­ணைக்கு அமை­வாக இந்த உள்­ளகப் பொறி­முறை உரு­வாக்­கப்­படும் என அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது. இந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய இலங்கை அர­சாங்கம் நான்கு கார­ணி­களின் அடிப்­ப­டையில் உள்­ளகப் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாக ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு வாக்­கு­றுதி அளித்­துள்­ளது.

அதன்­படி அர­சாங்கம் ஏற்­க­னவே காணாமல் போனோர் குறித்து ஆராயும் நிரந்­தர அலு­வ­ல­கத்­திற்­கான சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்றி அதனை ஸ்தாபிப்­ப­தற்­காக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. அதே­நேரம் விரைவில் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வையும் ஸ்தாபிக்­க­வுள்­ள­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.

அத்­துடன் மீள்­நி­க­ழாமை மற்றும் நஷ்டஈடு வழங்கும் செயற்­பாடு போன்­ற­வற்­றையும் முன்­னெ­டுப்­ப­தாக அர­சாங்கம் உறு­தி­ய­ளித்­துள்­ளது. இந்­நி­லையில் இறுதி பொறுப்­புக்­கூறல் பொறி­முறை எவ்­வாறு அமையும் என்­பதை தீர்­மா­னிக்கும் நோக்கில் அர­சாங்கம் ஒரு அணியை நிறுவி நாட்டு மக்கள் மத்­தியில் ஆலோ­ச­னை­க­ளையும் கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் நடத்தி வந்­தது. அதன்­படி அதன் அறிக்கை விரைவில் அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் அர­சாங்கம் எதிர்­வரும் ஜன­வரி அல்­லது பெப்­ர­வ­ரி­யா­கும்­போது பொறுப்­புக்­கூறல் பொறி­முறை வரைபை தயார் செய்து ஜெனி­வா­விற்கு சமர்ப்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு அர­சாங்­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­பதே பொருத்­த­மாகும்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் இந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை ஆகிய இரண்டு விட­யங்­க­ளுக்கும் முடிச்­சுப்­போடும் போக்கே தற்­போது காணப்­ப­டு­கின்­றது. அதா­வது இந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கப் செயற்­பாட்டை முன்­னி­லைப்­ப­டுத்தி பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை வலு­வி­ழக்கச் செய்ய முயற்­சிக்­கப்­ப­டுமா? என்ற விடயம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்பில் அனைத்துத் தரப்­பி­னரும் கவனம் செலுத்­த­வேண்டும். அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்­க­ளுக்கு அவர்­க­ளது அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­கின்ற அதி­கா­ரப்­ப­கிர்­வுடன் கூடிய அர­சியல் தீர்­வுத்­திட்டம் எந்­த­ளவு முக்­கி­ய­மா­னதோ, அதே அளவு பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டின் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­டு­வதும் மிகவும் அவ­சி­ய­மாகும்.

குறிப்­பாக யுத்­த­கா­லத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல் என்­ப­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் நீண்­ட­கா­ல­மாக நீதியை எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றனர். குறிப்­பாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் தமது உற­வுகள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது கூடத் தெரி­யாமல் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர்.

கடத்­தப்­பட்ட தமது உற­வுகள் அல்­லது காணாமல் போன தமது அன்­புக்­கு­ரி­ய­வர்கள் உயி­ருடன் இருக்­கின்­ற­னரா? இல்­லையா என்­பது கூடத் தெரி­யாமல் அந்த மக்கள் தவிப்­பு­டனும் திண்­டாட்­டத்­து­டனும் இருக்­கின்­றனர். அது­மட்­டு­மன்றி பாதிக்­கப்­பட்ட மக்கள் பொரு­ளா­தார ரீதியில் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொண்டு வாழ்­வா­தார விட­யத்தில் திண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.

எனவே பொறுப்­புக்­கூறல் பொறி­முறை கொண்­டு­வ­ரப்­பட்டு காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­ட­றி­வதும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்டஈட்டை வழங்கி அவர்­களின் எதிர்­கா­லத்தை முன்­னேற்­று­வதும் அவசியமாகும். இது தொடர்பில் அரசாங்கம் மிகவும் தீவிரமாக சிந்திக்கவேண்டும்.

அரசியலமைப்பின் ஊடாக அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வுத்திட்டத்தை முன்வைத்து அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவது அவசியம். அதனூடாக எதிர்காலத்தில் இந்த நாட்டில் எந்தவிதமான அரசியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

இந்த விடயத்தில் அரசாங்கம் ஆர்வம் காட்டுகின்றமையானது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால் அதேநேரம் பொறுப்புக்கூறல் விடயத்திலும் அக்கறை செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்றிவிடக்கூடாது.

அரசாங்கம் இந்த விடயத்தில் ஒரு தர்மசங்கடமான நிலையில் இருக்கின்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு கடும்போக்குவாத இனவாதிகளை தாண்டி தீர்வு காண்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். ஆனால் அதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காமல் இருந்து விட முடியாது. அதுமட்டுமன்றி இந்த விடயத்தை தாமதப்படுத்தி காலத்தை இழுத்தடிக்கவும் எந்தவொரு தரப்பும் முயற்சிக்கக்கூடாது.

தமிழ் தரப்பு தலைமைகள் இந்த விடயத்தில் சாமர்த்தியமாகவும், அதேநரம் அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் செயற்படவேண்டும். இல்லாவிடின் இதுவரை காலமும் அரசியல் தீர்வு என்பது எந்தளவு தூரம் எட்டாக்கனியாக இருந்ததோ அதேபோன்று பொறுப்புக்கூறும் செயற்பாடும் எட்டாக்கனியாக மாறிவிடும் என்பதே திண்ணம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சசிகலாவுடன் திரைப்படத்துறையினர் சந்திப்பு..!!
Next post பெண்களை முத்தமிட்டு ‘வீடியோ’ வெளியிட்ட இளைஞர் உதவியாளருடன் கைது..!!