கரப்பான்பூச்சியை காட்டி உடலுறவுக்கு வற்புறுத்தும் கணவர்..!!
கரப்பான்பூச்சியை காட்டி பயமுறுத்தி உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவதாக கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு இந்திராநகர் பகுதியில் வசித்து வரும் சுஜாதா, அவினாஷ் சர்மா தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக இல்லறவாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி ஊழியர்களான இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
அவினாஷின் கள்ளத்தொடர்பு பற்றி தெரிந்தபோதில் இருந்து அவருடன் உடலுறவில் ஈடுபட மறுப்புத் தெரிவித்து வந்த சுஜாதாவிடம் கரப்பான்பூச்சியை காட்டி மிரட்டி கட்டாய உடலுறவுக்கு வற்புறுத்துவதாக இந்திராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சுஜாதாவிற்கு கரப்பான்பூச்சி போபியா இருப்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவினாஷ் இதுபோன்ற செய்களில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், விவாகரத்துக் கோரிய சுஜாதாவுக்கு, விவாகரத்து அளிக்கவும் அவினாஷ் மறுத்துள்ளார். இந்நிலையில், இந்த தம்பதிகளின் புகாரை பெண்கள் ஆலோசனை மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதையடுத்து, இருவருக்கும் தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating