இத்தாலியில் தீப்பிடித்த பேருந்து; இளம் மாணவர்கள் உட்பட 18 பேர் பலி..!!
Read Time:1 Minute, 2 Second
இத்தாலியில், ஹங்கேரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.
இத்தாலியின் வெரோனா நகரில், நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற முயற்சித்த பேருந்து எதிர்பாராத விதமாக வீதியை விட்டு விலகியதாலேயே பேருந்து விபத்துக்குள்ளானது என்றும், விபத்துக்குள்ளான ஓரிரு நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் பயணித்தவர்களில் அனேகர் பதின்ம வயது மாணவர்கள். அவர்களுடன் அவர்களது ஆசிரியர்களும் பெற்றோரும் பயணித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating