நுளம்புகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான புதிய வழிமுறை..!!
Read Time:1 Minute, 28 Second
நுளம்புகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான எளிய வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஆய்வு குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
ஸ்டிக்கர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதனை தமது ஆடைகளில் ஒட்டி கொண்ட பின்னர் நுளம்புகள் கொட்டுவதை தவிர்ப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த ஸ்டிக்கர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதில் இருந்து வெளியேறும் இரசாயனம் காரணமாக நுளம்புகளுக்கு மனிதர்களின் வாசனையை அறிந்து கொள்ள முடியாது எனவும், இதனால் மனித உடலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது எனவும் அந்த ஆய்வு குழு சுட்டிக்காட்டியுள்ளது.
விஸேடமாக டெங்கு மற்றும் மலேரியா போன்ற உயிர் கொல்லி நோயிகளுக்கான சரியான தீர்வு இதன் மூலம் கிடைக்கப்பெறலாம் என அந்த ஆய்வு குழு எதிர்பார்க்கின்றது.
விரைவில் இது;சந்தைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த ஆய்வு குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating