இரு விமானங்கள் நேருக்குநேர் மோதல்:
Read Time:55 Second
சீன தலைநகர் பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு 2 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவ்விபத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். சீன நாட்டு ஏர்லைன்ஸýக்கு சொந்தமான அந்த 2 விமானங்கள் இந்த விபத்தில் சிறு சேதாரம் ஏற்பட்டன.
விபத்தையடுத்து, விமானங்களில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அந்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.