சமந்தா நிச்சயதார்த்த பட்டு புடவையில் இத்தனை விஷயமா?..!!
Read Time:1 Minute, 9 Second
தமிழ், தெலுங்கு சினிமாவில் தற்போதைய ஹாட் டாபிக் சமந்தாவின் நிச்சயதார்த்தம் தான்.
இவர்கள் நிச்சயதார்த்தம் முதலில் நாகசைதன்யா குடும்ப வழக்கமான இந்து முறைப்படியும், பின் சமந்தா கலாச்சார கிறிஸ்தவ முறைப்படியும் நடந்தது.மிக பிரம்மாண்டமாக நடந்த இவ்விழாவில் சமந்தா அணிந்திருந்த பட்டுப்புடவை தாம் மிகப்பெரிய ஹைலைட்டாக இருந்தது.
இதன் ஸ்பெஷாலிட்டியே நாகசைதன்யா சமந்தாவின் காதல் துவங்கியதிலிருந்து அவரது தம்பி அகிலின் நிச்சயத்தார்த்தம் வரை நடந்த நிகழ்வுகளை பிரத்யேகமாக டிசைனாக வடிவமைத்திருந்தனர்.
இதனால் நிச்சயத்துக்கு வந்த எல்லா பெண்களின் பேச்சு, பார்வை அனைத்தும் சமந்தாவின் நிச்சயம் புடவையின் மீதே இருந்தது.
Average Rating