சசிகலா போடப்போகும் ஒரே கையெழுத்து: பலிக்குமா மாஸ்டர் பிளான்?..!!
ஒரே கையெழுத்தால் மக்கள் மனதில் குடிகொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தனக்கு நெருக்கமானவர்களுடனும், குடும்பத்தினருடனும் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்.
அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், அவர் முதல்வராவதை தொண்டர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
அப்படியிருக்கையில் தொண்டர்களை கவர என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில், சசிகலா போடும் ஓரே கையெழுத்தில் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள். அதற்கு இரண்டு திட்டங்களை இப்போது தயார் செய்து வருகிறார்கள்.
ஒன்று, ஒட்டுமொத்த பெண்களையும் மகிழ்ச்சியில் ஆற்றும் விதமாக முதல்வராக பதவியேற்று “மதுவிலக்கில் கையெழுத்து போடுவது” அல்லது இளைஞர்களை கவர தேர்தலின்போது ஜெயலலிதா அறிவித்த“வீட்டுக்கு ஒரு செல்போன்”திட்டத்தில் கையெழுத்து போட்டு உடனடியாக அதை அமல்படுத்துவது என்ற திட்டத்தில் இப்போது கார்டனில் ஆலோசனை செய்துவருகிறார்கள்.
Average Rating