வயோதிப பெண்ணொருவரின் அசாத்திய துணிச்சல்..! (அசத்தல்வீடியோ)
Read Time:1 Minute, 15 Second
ரயில் வந்து கொண்டிருப்பதை அறிந்தும் தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்த முதிய பெண்ணொருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்றுபோது குறித்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ரயில் வருவதாகவும், தண்டவாளத்திலிருந்து அகன்று செல்லும்படியும் கூக்குரல் எழுப்பியபோதும், அந்த பெண் மிகச் சாதாரணமாக ரயிலின் எதிரே நடந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பெண்ணை கண்ட ரயில் சாரதி, துரித கதியில் செயற்பட்டு ரயிலை நிறுத்தியுள்ளார்.
அதேநேரம், அந்தப் பெண்ணும் ரயிலை நேருக்கு நேர் எதிர்கொண்டபடி நடைபாதையில் ஏறிய நிலையில் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் உயிர்தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ, சமூகவலைத்தளங்களில் இப்போது வைரலாகியுள்ளது.
Average Rating