வங்கி பெண் அதிகாரி உள்பட 3 பேர் தற்கொலை..!!

Read Time:4 Minute, 21 Second

201702041904304968_bank-woman-officer-including-3-person-suicide-why_SECVPFஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம் பாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவரது மனைவி ராதாமணி (55).இவர்களது மகள் கிருத்திகா (31).

மனோகரன் ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். கிருத்திகா வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மான் குறிச்சி என்ற இடத்தை சேர்ந்த இவர்கள் சின்னியம்பாளையத்தில் சொந்த வீடு கட்டி வசித்து வந்தனர்.

கிருத்திகாவுக்கு திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் அவருக்கு பொருத்தமான மாப்பிள்ளையை பல இடங்களில் பார்த்தனர்.

அப்போது கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபரை கிருத்திகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிச்சயதார்த்தம் நாளை மறுநாள் (6-ந்தேதி) நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோகரன், அவரது மனைவி ராதாமணி, மகள் கிருத்திகா ஆகிய 3 பேரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். இதன்பிறகு நேற்று காலை வெகு நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.

இதனால் இவர்களின் வீட்டுக்கு வழக்கமாக பால் ஊற்ற வரும் பால் வியாபாரி திரும்பி சென்று விட்டார். பிறகு மாலையில் மீண்டும் அவர் வந்த போதும் மனோகரனின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஈரோடு சாஸ்திரி நகரில் வசிக்கும் மனோகரனின் தம்பி அசோகனுக்கு தகவல் கொடுத்தார்.

அவர் வந்து பார்த்த போது மனோகரன் அவரது மனைவி ராதாமணி , இவர்களின் மகள் கிருத்திகா ஆகிய 3 பேரும் வி‌ஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதன்பிறகு அவர்களின் உடல்கள் பிரேத பாசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மனோகரன்,ராதாமணி, கிருத்திகா ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்னர்.

இவர்களிடம் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மனோகரன் மற்றும் கிருத்திகா ஆகியோரின் செல்போன்களில் பதிவான போன் எண்களை வைத்தும் விசாரணை நடந்து வருகிறது.

மனோகரன் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் தற்கொலைக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்பட வில்லை.

கிருத்திகாவுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் இந்த சம்பவம் நடந்து உள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது பற்றி மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவனின் அப்பாவிற்கு வாழ்க்கை கொடுத்த ஒரு ஆசிரியை..!!
Next post இந்த பெண்களின் தோற்றத்தை கண்டால் நீங்கள் அசந்து போவிங்க..!! (வீடியோ)