ஏமனில் பழங்குடியினர் தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலி..!!

Read Time:1 Minute, 36 Second

201702060528279515_Yemeni-tribals-kill-13-Al-Qaeda-militants_SECVPFஏமனில் அரசு படைகளுக்கும், ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன. இந்த சண்டையை பயன்படுத்தி, அங்கு அல்கொய்தா இயக்கத்தினர் கால்பதித்து வருகின்றனர். அவர்கள், ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில், அப்யான் மாகாணத்தில், லோடர் உள்ளிட்ட 3 நகரங்களில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த இயக்கத்தினர் புகுந்தனர். ஆனால் இரு நகரங்களில் உள்ளூர் பழங்குடி இன மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து அவர்கள் ஓட்டம் எடுத்தனர். இருப்பினும் லோடர் நகரில் அவர்கள் அவ்வாறு ஓட்டம் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு அவர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். ஆனால் பழங்குடி இன மக்கள் அவர்களுக்கு தங்களது துப்பாக்கிகளால் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே இந்த சண்டை பல மணி நேரம் நீடித்தது. அதன் முடிவில் அல்கொய்தா இயக்கத்தினர் 13 பேர் பலியாகினர்.

இது அல்கொய்தா இயக்கத்தினருக்கு விழுந்த பலத்த அடியாக கருதப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புற்றுநோயில் இருந்து காக்கும் கேரட்..!!
Next post மிருகங்களுடன் திருமணம் செய்த மனிதர்கள்..!! (வீடியோ)