6 வயது சிறுமியை கொன்று, தீ வைத்து எரித்த வாலிபர்..!!

Read Time:4 Minute, 31 Second

201702081223512693_6-year-old-girl-murder-case-youth-arrest_SECVPFபோரூரை அடுத்த மத நந்தபுரம் மாதா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாபு. பெருங்களத்தூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ஸ்ரீதேவி. மகள் ஹாசினி (வயது 6), மகன் தேஜஸ் (4).

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஹாசினி தனது நண்பருடன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென்று அவள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து மாங்காடு போலீசில் புகார் செய்தனர். சிறுமியை பணத்துக்காக யாராவது கடத்திச் சென்றார்களா? அல்லது கிணறு, கால்வாயில் தவறி விழுந்து விட்டாளா? என்று போலீசார் விசாரித்து வந்தனர்.

அடுக்கு மாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சிறுமி ஹாசினி மாலை 6.30 மணிக்கு வீட்டுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. அதன் பின்னர் தான் அவள் மாயமாகி இருந்தாள்.

இதையடுத்து போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மற்றொரு கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது இரவு 9.30 மணிக்கு ஒரு வாலிபர் பையுடன் வெளியே செல்வதும், ஒரு மணி நேரம் கழித்து அதே வாலிபர் பை இல்லாமல் குடியிருப்புக்குள் செல்வதும் பதிவாகி இருந்தது.

அந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரித்த போது அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் (22) என்பது தெரியவந்தது. இவர் மயிலாப்பூரில் உள்ள மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். முதலில் தான் திருமணத்துக்கு சென்றதாக கூறினார்.

ஆனால் திருமணத்தை பற்றிய தகவல்களை அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஹாசினியை கொலை செய்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சம்பவத்தன்று இரவு ஹாசினி விளையாடியபடி என் வீட்டுக்குள் வந்தாள். அப்போது அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன். இதனால் அவள் கத்தியதால் பயந்துபோன நான் போர்வையால் அவள் முகத்தை மூடி இறுக்கினேன். இதில் மூச்சுத்திணறி ஹாசினி இறந்தாள்.

இதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவித்தேன். அதன்பின் ஒரு பையில் ஹாசினி உடலை திணித்து எடுத்து வெளியே சென்றேன்.

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் அனகாபுத்தூர் பாலத்தையொட்டி 100 மீட்டர் தூரத்தில் பையுடன் ஹாசினியின் உடலை எரித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையடுத்து போலீசார் தஷ்வந்தை கைது செய்தனர். அவர் சிறுமி உடலை எரித்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு எரிக்கப்பட்ட சிறுமி உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாயமான 6 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தடுத்து ஆளுநரை சந்திக்க உள்ள பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா..!!
Next post அசிங்கமான பரு மற்றும் மரு அகற்ற சிறந்த வீட்டுவைத்தியம்..!!