ராணுவம் முன்னேற முயற்சி-தடுத்து நிறுத்தும் புலிகள்
திரிகோணமலை அருகே புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து புலிகளை வெளியேற்ற ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. புலிகள் பதிலடித் தாக்குதல் நடத்தி ராணுவத்தினரை தடுத்து வருகின்றனர். இந்தத் தாக்குதலில் 13 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். 71 பேர் காயமடைந்துள்ளனர். புலிகள் தரப்பின் சேதம் குறித்து தகவல் இல்லை. தாக்குதலில் 20 தமிழர்கள் பலியாகியுள்ளனர்.
திரிகோணமலை அருகே மூதூர்சம்பூர் பகுதிகள் அடுத்தடுத்து உள்ளன. மூதூர் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் சம்பூர் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இதில் சம்பூரை விட்டு புலிகளை விரட்ட ராணுவமும் மூதுருக்குள் ஊடுருவ புலிகளும் முயன்று வருகின்றனர்.
76 தமிழர்கள் கைது:
இதற்கிடையே,கொழும்பு நகரில் 76 தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். விமானம் நிலையத்தை தகர்க்க நடந்த பெரும் முயற்சி 2 நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு மு¬றியடிக்கப்பட்ட்து.
கண்ணிவெடிகள் உள்ளிட்டவை விமான நிலையம் அருகே சிக்கின. இதுதொடர்பாக 18 பேரை அதிரடிப் படை போலீஸார் கைது செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து கொழும்பு நகர் மற்றும் புற நகர்ப் பகுதிகளில் தீவிர வேட்டை நடந்தது. இதில் 76 தமிழர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.