வைகோவை, கைது செய்ய வேண்டும்: மதுரையில் சுப்பிரமணியசாமி பேட்டி

Read Time:1 Minute, 31 Second

Supramaniyaswamy.jpgஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுபவர்கள் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசி வருகிறார். மேலும் தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையிலும் அவரது பேச்சு அமைந்துள்ளது.

எனவே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் இதற்காக அவரை கைது செய்தோ அல்லது வீட்டு காவலில் வைத்தோ விசாரிக்க வேண்டும்.

வைகோ விசயத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். கூட்டணியில் இருப்பதால் வைகோவை கண்டிக்க அவர் தயங்குகிறார் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்காவில் விமானம் நொறுங்கியது; 7 பேர் பலி
Next post வடக்கு மோதல்களில் 16 விடுதலைப்புலிகள் பலி