மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான்: நடிகர் சூர்யா அதிரடி..!!
Read Time:1 Minute, 20 Second
தமிழகத்தில் நிலவி வரும் நெருக்கடியான அரசியல் சூழல் குறித்து நடிகர் சூர்யா அதிரடி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது முறையாக கூடிய சட்டசபையில் எதிர்கட்சியினர் இன்றி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றார்.
சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டு சட்டை கிழிந்த நிலையில் வெளியேற்றப்பட்டார்.
இந்த செயல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் பல அதிரடி கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவும் தற்போது களத்தில் குதித்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே…. என தெரிவித்துள்ளார்.
Average Rating