மனைவி கோபித்து சென்றதால் கணவன் தற்கொலை..!!
Read Time:1 Minute, 18 Second
தேனி மாவட்டம் கம்பம் பார்க்ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மணி (வயது32). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊர் திரும்பிய அவர் லண்டன் செல்வதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக ஏஜெண்டிடம் 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
ஆனால் தாமதப்படுத்திக் கொண்டே சென்றதால் மணி மற்றும் அவர் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
வேலை கிடைக்காத ஏக்கத்திலும், மனைவி கோபித்து சென்றதாலும் மனமுடைந்த மணி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Average Rating