“இதெல்லாம் இங்க சகஜம்ங்க” – பாலியல் தொல்லை குறித்து ராய் லட்சுமி..!!
நடிகை பாவனாவை அவரது முன்னாள் டிரைவர், தன் நண்பர்கள் மூவருடன் பாலியல் சீண்டல்கள் செய்தது கண்டு திரைத்துறை அதிர்ந்து போய் உள்ளது.
இது குறித்து பேசும்போது, வரலட்சுமி , ‘என் அப்பா இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும், நாசுக்காக ஒரு பிரபல தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் சில்மிஷமாக என்னிடம் பேசினார். எல்லா துறைகளிலும் இப்படி நடக்கிறது. குழந்தைகளிடமும், பெண்களிடமும் இப்படி பலாத்காரம் செய்வதை எதிர்த்து ஒரு இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன்” என்று பேசியுள்ளார்.
த்ரிஷாவோ,’ இதை நினைத்தால் கவலையாகவும் கோபமாகவும் உள்ளது. பாவனாவும் வரலட்சுமியும் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது. இது பத்தி ஒரு நடவடிக்கை எடுக்கணும்ன்னு ” சொல்லியிருக்கார்.
நம்ம ராய் லட்சுமி,’இதெல்லாம் எல்லா பீல்டு லே யும் இருக்கு. பெண்கள் சினிமாவில் மட்டும் இல்லை, எல்லா துறையிலும் அட் ஜஸ்ட் பண்ணிதான் போக வேண்டி இருக்குன்னு” அசால்ட்டா சொல்லிட்டார்.
Average Rating