சீனப் பெருஞ்சுவருக்கு இணையான சுவர் இந்தியாவிலும்…..!!
சீனப் பெருஞ்சுவர் உலகில் உள்ள மிகவும் பழமையான அதிசயமாகும். அதன் நீளமே இதற்கான காரணம் அமைந்துள்ளது.
எவ்வாறாயினும் சீனப் பெருஞ்சுவரை போல் பெரியதாக இல்லாத போதிலும் அதற்கு இணையான பழமையான பெருஞ்சுவர் ஒன்று இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.
சீனப் பெருஞ்சுவர் பற்றி உலகில் உள்ளவர்கள் அறிந்திருந்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் இந்த சுவர் பற்றி எவரும் அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.
இந்தியாவில் உள்ள இந்த பெருஞ்சுவர் ராஜஸ்தான் மாநிலத்தை 15ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராணா கும்ப என்ற மன்னர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த பெருஞ்சுவரின் நீளம் 38 கிலோ மீற்றர்கள். கும்பல்கிராஹா கோட்டையுடன் கூடியதாக இந்த சுவர் நிர்மாணிக்கப்பட்டது.
ராணா கும்பா மன்னர் தனது கோட்டைக்கு பலம் கொடுக்கும் வகையில் இந்த சுவரை நிர்மாணித்ததாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த கோட்டையானது தற்போது ஆடம்பர ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
Average Rating