அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்
புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வை நோக்கிய அடிப்படைத் தீர்வுத் திட்டத்தை வரைவதற்காக சர்வகட்சி மாநாட்டில் ஏகமனதாக தீர்மானித்ததற்கு இணங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சி பங்குபற்ற வேண்டுமென்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சி பேச்சு வார்த்தையினு}டாக தீர்வுக்கான தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து தெரிவித்து வந்திருக்கின்றது. இருப்பினும் ஆட்சியிலிருக்கும் கட்சி பேச்சு வார்த்தையினு}டாக ஒரு தீர்வினைக் காண முயற்சிக்கும் போது ஆட்சிக்கு வெளியே இருக்கும் கட்சிகள் தமது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக அவ்வாறான தீர்வினை எதிர்த்து அவற்றை செயற்படுத்த முடியாமல் தடுத்து வந்திருப்பதே இந்நாட்டின் வரலாறாகும்.
இந்த பின்னணியில் தான் மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டதற்கிணங்க கருத்தொருமைப்பாட்டினு}டாக ஒரு அடிப்படை தீர்வுத் திட்டத்தினை வரைந்து அதனை பேச்சுவார்த்தை மேடைக்கு சமர்ப்பிக்கின்ற பொழுது அது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படுமானால் அதன் பின்னர் அரசியல் hPதியாக எந்தக் கட்சியும் எதிர்க்க முடியாது. என்ற அடிப்படையில் ஜனாதிபதி இம்முயற்சியில் இறங்கியிருக்கின்றார்.