வன்னிப்புலி உறுப்பினர்களை -ரிஎம்விபி செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு
கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) கிழக்குமாகாண அரசியல் தலைமைக் செயலகமான மீனகத்தில் நேற்றுகாலை (30.08.2006) 11.15மணியளவில் வன்னிப்புலி அமைப்பிலிருந்து சரணாகதி அடைந்த ஜந்து வன்னிப்புலி உறுப்பினர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள், யுனிசெப் பிரதிநிதிகள், மனிதஉரிமை ஆணைக்குழு பிரதிநிதிகள் முன்னிலையில் மீனகம் பிரதிநிதிகளினால் ஜந்து வன்னிப்புலிகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பிரதிநிதி மாசலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஒப்படைக்கப்பட்ட இவர்கள், சிவம் பரனிதரன்(வயது 27) ஜானசேகரம் கஜேந்திரன்(வயது 19) பழனிநாதன் சசிகரன்(வயது 16) இராசலிங்கம் ஜெயச்சந்திரன்(வயது 19) வாவா கண்ணன்(வயது 15) ஆவர்.
இவர்களை பாரமெடுத்த மேற்படி சங்கத்தினர் இவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.