இரண்டு சிறுமிகளை கற்பழித்த நபர்: நீதிபதி அதிரடி தீர்ப்பு..!!
சிங்கப்பூர் நாட்டில் இரண்டு சிறுமிகளை கற்பழித்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்காதது மக்கள் மத்தியில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த Joshua Robinson(39) என்பவர் தற்காப்பு கலைகளை கற்பிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் நாட்டில் குடியேறியுள்ள அவர் அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு இக்கலைகளை பயிற்று வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு இணையத்தளம் மூலமாக 15 வயது சிறுமியை அவர் சந்தித்துள்ளார். இப்பழக்கம் நாளடைவில் வளர்ச்சி அடைய இருவரும் ஒரு நாள் நேரில் சந்தித்துள்ளனர்.
பின்னர், நபரின் வீட்டிற்கு சென்ற சிறுமி அவருடன் உறவுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிறுமிக்கு தெரியாமல் நபர் அக்காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு பிறகு வீடியோ காட்சிகளை காட்டிய அந்நபர் மீண்டும் அச்சிறுமையை உறவுக்கு அழைத்துள்ளார்.
நபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வேறு வழியின்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பெற்றோரின் புகாரை பெற்ற பொலிசார் நபரை கைது செய்தனர்.
மேலும், அவருடைய வீட்டை சோதனை செய்தபோது அவர் ஏற்கனவே மற்றொரு 15 வயது சிறுமியிடம் உறவுக்கொண்டது தெரியவந்தது.
இதுமட்டுமில்லாமல், அவரது அறையில் இருந்து 321 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. சிங்கப்பூர் வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் ஆபாசப்பட வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
சிறுமிகளை கற்பழித்த குற்றத்திற்காக நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், சிறுமிகளின் அனுமதி பேரில் இச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் குற்றவாளிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நீதிபதியின் தீர்ப்பை கண்டித்துள்ள பெண்கள் நல ஆர்வலர்கள் தற்போது 27,000 பேரிடம் கையெழுத்து பெற்று தண்டனையை கடுமையாக்க வேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Average Rating