சிங்கத்துடன் சிங்கிளாக மோதி ஓட விட்ட வரிக்குதிரை: மிகவும் அரிதான வீடியோ..!!
காட்டின் ராஜா என அழைக்கப்படும் சிங்கத்துடன் வரிக்குதிரை ஒன்று சிங்கிளாக மோதி வென்ற அரிய சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.
குறித்த வீடியோவில், இளம் வரிக்குதிரை ஒன்று ஆற்றில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த போது திடீரென சிங்கம் ஒன்று அதன் தாடை பகுதியை கூர்மையான பற்களால் பிடித்துக்கொள்கிறது.
வரிக்குதிரை இறந்து விடும் அதை பசிக்கு இரையாக்கி விடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த சிங்கத்திற்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் வரிக்குதிரை எதிர்த்து போராட தொடங்குகிறது.
சிங்கத்தை ஆற்று தண்ணீர் முழ்கடிக்க மூச்சு திணறிய சிங்கம் தனது வரிக்குதிரையின் தாடையிலிருந்து பற்களை எடுக்கிறது.
பின்னர், வரிக்குதிரை தனது வழுவான கால்களால் சிங்கத்தை உதைத்து தண்ணீரில் முழ்கடித்து தப்பி ஓடிவிடுகிறது.
தடுமாறி விழுந்த சிங்கம் எழுந்து தப்பி ஓடிய வரிக்குதிரையை துரத்தி மெதுவாக ஓடுகிறது. இந்த அரிய காட்சியை சமூகவலைதளத்தில் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
எனினும், குறித்த வீடியோ எந்த நாட்டில், யாரால் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
Average Rating