காதலித்து கழட்டி விட்ட காதலி: காதலன் அவரை என்ன செய்தார் தெரியுமா?..!! (வீடியோ)
காதலி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததால், காதலன் அவரை கொடூரமாக சுத்தியலை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டி வாக்கத்தை சேர்ந்தவர் ஜெனிபர் புஷ்பா. செம்மஞ்சேரி பகுதியைச் சேந்தவர் ஜான்மேத்தீசும். இவர்கள் இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலியான ஜெனிபர் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று காதலனிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெனிபரின் பிறந்தநாள். இதனால் ஜெனிபரை தொடர்பு கொண்ட காதலன் கடைசியாக இருவரும் மாமல்லபுரத்தில் சந்தித்து விட்டு பின்னர் பிரிந்து விடுவோம் என்று கூறியுள்ளார். அப்போது உனக்கு நான் பரிசு ஒன்று கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஜெனிபர் மாமல்லபுரத்திற்கு சென்றார். இருவரும் அங்குள்ள குகை அருகே பேசி கொண்டிருந்தனர். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி ஜெனிபரை காதலன் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் ஜெனிபர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து பரிசு பொருளையாவது வாங்கி கொள் என்று கூறி அட்டை சுத்தியல் ஒன்றை எடுத்த ஜெனிபர் தலையில் ஓங்கி அடித்தார் காதலன்.
இதனை சற்றும் எதிர்பாராத ஜெனிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து சவுக்கு மரத்தில் காதலனும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating