பேஸ்புக்கில் மாணவிகளின் ஆபாச படங்களை அடிக்கடி வெளியிட்ட நபர்: கையும் களவுமாக பிடித்த பொலிசார்..!!
கேரளாவில் மாணவிகளை, ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் படித்து, அதை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிட்டு வந்த நபர் ஒரு ஆசிரியர் என்ற பரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கேரள பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் ஆபாச படங்கள் பேஸ்புக்கில் அடிக்கடி வெளிவருவதாக பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுபற்றி விசாரணை செய்த சைபர் கிரைம், அந்த ஆபாச படங்கள், பேஸ்புக்கில் ஆஷிக் என்ற போலி முகவரியில் வெளியாகி வருவதை கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண்குமார் (36) என்ற ஆசிரியர் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனால் பொலிசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட போது அங்கு 6 செல்போன்களும், ஒரு லேப்டாப்பையும் கைப்பற்றியுள்ளனர்.
லேப்டாப்பில், அவரிடம் டியூசன் படிக்க வரும் மாணவிகளின் ஆபாச படங்களை அவர் சேமித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அந்த வீடியோக்களை போலி பேஸ்புக் முகவரியில் வெளியிட்டு வந்தது தெரிய வந்தது.
அவரை உடனடியாக கைது செய்த பொலிசார், இது தொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் அவரிடம் டியூசன் படித்த மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating