‘ரிஎம்விபி”யிடம் சரணடைந்த மேலும் ஆறு வன்னிப்புலிகள் சர்வதேச பிரதிநிதிகளிடம் கையளிப்பு
கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த வன்னிப்புலி உறுப்பினர்கள் ஆறுபேர் மனிதாபிமான அடிப்படையில் 01.09.06அன்று விடுவிக்கப்பட்டனர். மீனகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரால் சரணடைந்த ஆறு வன்னிப்புலி உறுப்பினர்களும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டனர். மனிதஉரிமை ஆணைக்குழு, யூனிசெப் பிரதிநிதிகளின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் 01.09.06ல் கையளிக்கப்பட்ட வன்னிப்புலி உறுப்பினர்களின் விபரம் வருமாறு, கணேசலிங்கம் விஜயகுமார்(வயது18), பாக்கியராசா செல்வக்குமார்(வயது21), யோகராசா ஜெயந்தன்(வயது18), பேரின்பராசா மகேந்திரன்(வயது27), முத்தையா நவரெட்ணராஜா(வயது34), முத்தையா பாஸ்கரன்(வயது27) ஆகியோர் ஆவர்.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் (30.08.06) ஏற்கனவே ஐந்து வன்னிப்புலி உறுப்பினர்களான சிவம் பரனிதரன்(வயது 27) ஜானசேகரம் கஜேந்திரன்(வயது 19) பழனிநாதன் சசிகரன்(வயது 16) இராசலிங்கம் ஜெயச்சந்திரன்(வயது 19) வாவா கண்ணன்(வயது 15) ஆகியோர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சுரணடைந்த பதினொரு வன்னிப்புலிகள் அனைவரது புகைப்படங்களும் கீழே பிரசுரிக்கப்படுகிறது…..
THANKYOU For…. WWW.ATHIRADY.COM