சாதாரண மனிதரை திருமணம் செய்வதற்காக அரச பதவியை துறந்த இளவரசி: நெகிழ வைக்கும் சம்பவம்..!!

Read Time:3 Minute, 0 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90ஜப்பான் இளவரசி ஒருவர் தமது காதலுக்காக அரச பதவியை துறந்துள்ள சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜப்பான் பேரரசர் அக்கிஹிட்டோவின் பேத்தியும் இளவரசியுமான Mako தமது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தனக்கான அரச பதவிகள் அனைத்தியும் துறந்துள்ளார்.

இளவரசி Mako தமது வருங்கால கணவராக அரச குடும்பத்து உறுப்பினரல்லாத நபர் ஒருவரை தெரிவு செய்துள்ளார். கடல் மீது ஆர்வம் கொண்டவரும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பொருட்டு சாகசங்கள் மேற்கொள்பவருமான 25 வயதான Kei Komuro என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது.

இதன் பொருட்டு அரச குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமான அனுமதியை பெற வேண்டி இளவரசி Mako கோரிக்கை வைத்துள்ளார்.

இளவரசியின் கோரிக்கையை அரச குடும்பம் தீவிர ஆலோசனைகளுக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளும் எனில், ஜப்பானிய இளவரசி Mako தமக்கான அனைத்து அரச பதவிகளையும் துறக்க நேரிடும். இதுநாள் வரை இளவரசியாக வலம் வந்த Mako அவரது திருமணத்திற்கு பின்னர் பொதுமக்களில் ஒருவராக கருதப்படுவார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமைந்துள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர் 25 வயதாகும் இளவரசி Mako. குறித்த பல்கலைக்கழகத்தில் உடன் பயின்றவர் தற்போது இளவரசி திருமணம் செய்து கொள்ளவிருக்கும் Kei Komuro என்பவர்.

அரச குடும்பத்தின் அனுமதி பெற்ற பின்னர் இளவரசிக்கு உரிய அனைத்து பதவிகளும் துறக்க நேர்ந்தாலும், திருமணம் என்பது மிகவும் ஆடம்பரமாகவும் ஜப்பானிய அரச குடும்பத்திற்கே உரித்தான பாணியில் மிகவும் விமரிசையாக நடைபெறும்.

முதலில் திருமணம் செய்து கொள்ளும் மணமகன் மணமகள் பெயரை கோலாகல விழா ஒன்றில் அரச குடும்பம் அறிவிக்கும். இதனையடுத்து முறைப்படி மணமகனும் மணமகளும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடம் அனுமதி கோர வேண்டும். அதன் பின்னர் திருமண நாள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

இளவரசி Mako தமது காதலரை ஏற்கெனவே அரச குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தி அனுமதியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூங்கி எழுந்ததுமே வேலை செய்யக்கூடாது..!!
Next post கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ?..!!