அம்மாவை கண்டித்த சீனு ராமசாமி..!!
Read Time:1 Minute, 24 Second
‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட பேர் சொல்லும்படியான படங்களை சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குனர் சீனுராமசாமி. இவருடைய படங்களில் எப்போதும் தாய் பாசத்துக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும்படியாகத்தான் கதை இருக்கும்.
இதற்கு காரணம், அவர் தனது தாயின் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் என்பதுதான் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட அவருடைய அம்மா, சமீபத்தில் செய்த ஒரு காரியத்தால் சீனு ராமசாமி தனது அம்மாவை கண்டித்துள்ளார்.
அதாவது, சமீபத்தில் சீனு ராமசாமியின் அம்மா, இவருக்கு தெரியாமல் திருப்பதி போய், ஏழுமலையானை தரிசித்துவிட்டு வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சீனுராமசாமி, தனது டுவிட்டரில் கூறும்போது, ‘இந்த அற்பன் சீனு ராமசாமி வாழவேண்டுமென்று எனக்கு தெரியாமல் திருப்பதி போன அம்மாவை கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Average Rating