ஓடும் ரயிலில் கதறிய நோய்வாய்ப்பட்ட பெண்…சித்ரவதை செய்து கற்பழித்த ரயில்வே பொலிஸ்..!!
இந்தியாவில் ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை ரயில்வே பொலிசார் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்-லக்னோ இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சிகிச்சைக்காக லக்னோ சென்ற மீரட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், சிகிச்சைக்கு பின் ஊர் திரும்பும் போது ரயில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறியுள்ளார்.
அவரை விசாரித்த டிடிஆர், அப்பெண்ணை ஊனமுற்றோர் பெட்டிக்கு அனுப்பியுள்ளார். அந்த பெட்டியில் தனியாக இருந்த அரசு ரயில்வே பொலிசார் Shukla, அந்த ரயில் பெட்டியின் கதவுகள் அனைத்தையும் மூடி அப்பெண்ணை சித்ரவதை செய்து கற்பழித்துள்ளார்.
அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போது ஊனமுற்றோர் பெட்டியை திறக்க முடியாமல் திணறிய பயணிகள், கதவை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை கண்ட மக்கள் அவரை விசாரித்து உண்மையை அறிந்துள்ளனர். பின்னர், குற்றவாளியை தண்டிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவயிடத்திற்கு விரைந்த மாவட்ட நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்துள்ளனர். இதனையடுத்து, Shukla மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating