நன்கொடை கோரி வந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற நபர்..!!
கனடா நாட்டில் நன்கொடை கோரி வந்த இளம்பெண் ஒருவரை நபர் ஒருவர் கற்பழிக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் 18 வயதான இளம்பெண் ஒருவர் Vanness Avenue பகுதியில் நன்கொடை வசூல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீடு ஒன்றின் கதவை தட்டியபோது நபர் ஒருவர் கதவை திறந்துள்ளார். நபரிடம் நன்கொடை கேட்டபோது அவர் உள்ளே அழைத்தாக கூறப்படுகிறது.
பின்னர், வீட்டிற்குள் இளம்பெண் நுழைந்ததும் அவர் மீது பாய்ந்த நபர் கற்பழிக்க முயன்றுள்ளார். ஆனால், துணிச்சலாக செயல்பட்ட இளம்பெண் அங்கிருந்து வெளியேறி தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இளம்பெண் பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து பொலிசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
எனினும், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டாரா இல்லையா? என்ற தகவலை பொலிசார் வெளியிடவில்லை.
நன்கொடை வாங்குவதற்காக வீடு வீடாக செல்லும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும், இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating