அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் கணவருடன் நடிகை தேவயானி சாமி தரிசனம்..!!

Read Time:1 Minute, 42 Second

201706021630444685_Actress-Devayani-worship-with-her-husband-temple-in-anthiyur_SECVPF‘காதல்கோட்டை’ உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் ராஜகுமாரன். காதல் கோட்டை படத்தில் நாயகியாக நடித்த நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டைரக்டர் ராஜகுமாரனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஆகும்.

சென்னையில் வசித்து வந்தாலும் அவ்வப்போது மனைவி தேவயானி மற்றும் குழந்தைகளுடன் டைரக்டர் ராஜகுமாரன் அந்தியூர் வந்து செல்வார்.

அதேபோல் நேற்றும் டைரக்டர் ராஜகுமாரன் நடிகை தேவயானியுடன் அந்தியூர் ஆலம் பாளையத்தில் உள்ள தனது பண்ணைவீட்டுக்கு வந்திருந்தார்.

நேற்று மாலை 6.30மணி யளவில் ராஜகுமாரனும் தேவயானியும் தம்பதி சகிதமாக அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பிறகு சாமி தரிசனம் செய்த அவர்கள் கோவிலை வலம் வந்தும் வழிபட்டனர்.

கோவிலுக்கு வந்திருந்த பெண் பக்தர்கள் நடிகை தேவயானியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரிடம் சென்று பேசினர். அப்போது பெண்களிடம் நடிகை தேவயானி, “அக்கா நல்லா இருக்கீங்களா..? வீட்டில் எல்லோரும் சுகமா?” என்று விசாரித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாற்றம் எங்கு தேவை?..!! (கட்டுரை)
Next post நான்ஸ்டாப்பா சிரிச்சிட்டே இருக்கணுமா??? அப்போ இந்த காணொளியை மட்டும் பாருங்க..!!