கூந்தல் உதிர்வுக்கு காரணம் என்ன? தீர்வு இதுதான்..!!
முடி உதிர்தலுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மன அழுத்தம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்துவது எப்படி?
மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, நம் உடம்பில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் சீபம் எனும் எண்ணெயை அதிகமாகச் சுரக்கும்.
அதேபோல மன அழுத்தமும் கோபமும் அதிகமாக இருக்கும் போது, ரத்த நாளங்கள் சுருங்கி விடுவதால், முடியின் வேர்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்த ஓட்டம் 5, 10 நிமிடங்கள் தடைபட்டாலே அது முடி உதிர்வை ஏற்படுத்தும்.
முடி உதிர்வை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
எண்ணெய் பசையான மண்டைப் பகுதியைக் கொண்டவர்கள் தினசரி தலைக் குளிக்க கெமிக்கல் தவிர்த்து சீயக்காய் அல்லது முட்டை கலந்த ஷாம்பு உகந்தது.
வறண்ட மண்டைப் பகுதி உடையவர்கள் மாயிச்சரைசிங் ஷாம்பு உபயோகிக்கலாம்.
தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயிலும், 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயிலும் கலந்து தலைக்கு குளித்தால், கூந்தலில் இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.
கூந்தல் உதிர்வை தடுக்க வீட்டு சிகிச்சை
100 மி.லி ஆலிவ் ஆயில், 100 மி.லி விளக்கெண்ணெய், 100 மி.லி பாதாம் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து, அதில் 50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில், 50 சொட்டு சிடர்வுட் ஆயில் ஆகியவற்றைக் கலந்து, 1 வாரம் கழித்து, இந்த எண்ணெய்யை தினமும் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்க வேண்டும்.
இதேபோல 1 மாதம் செய்து வந்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்பதுடன் கூந்தல் நன்கு வளர ஆரம்பிக்கும்.
50 மி.லி கெட்டியான தேங்காய் பாலில், 3 ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூலை உடைத்துக் கலந்து, அதனுடன் பொடுதலைப் பொடி மற்றும் வில்வம் பொடி ஆகிய இரண்டையும் கலந்து, முதல் நாள் இரவே தலையில் தடவி, மறுநாள் காலையில் இந்தக் கலவையை தலையில் தடவி பெரிய பல் கொண்ட சீப்பால் நன்கு வாரி விட வேண்டும்.
பின் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்து, நீர்க்கச் செய்த மைல்டான ஷாம்பு கொண்டு குளிக்க வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவி, இந்த பேக்கை மட்டும் வாரத்தில் 2 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
Average Rating