முதல்வராகும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு..!!
மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `ஸ்பைடர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தசராவை முன்னிட்டு வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. `ஸ்பைடர்’ மூலமாக மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை முடித்து பிறகு, அடுத்ததாக கோரதாலா சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மகேஷ் பாபு நடிக்க இருக்கிறார். பாரத் அனே நேனு என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் மகேஷ் பாபு, முதல்வராக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த படத்தின் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் `முதல்வன்’ படத்தில் முதல்வராக நடித்திருந்தார். பின்னர் `முதல்வன்’ படத்தின் இந்தி ரீமேக்கான `நாயக்’ படத்தில் அணில் கபூர் முதல்வராக நடித்தார். கடந்த 2010-ல் வெளியான `லீடர்’ படத்தில் ராணா முதல்வராக நடித்திருந்த நிலையில், மகேஷ் பாபு முதல்வர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதுதவிர அந்த படத்தில் சரத்குமாரும் நடிக்க இருக்கிறாராம். மகேஷ் பாபுவின் அப்பா கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating