பெண்களை போனில் பேசி மயக்கிய மருத்துவர்: பேசுவியா! பேசுவியா? என அடி கொடுத்த மக்கள்..!! (வீடியோ)
இந்தியாவில் மருத்துவர் ஒருவரை பொதுமக்கள் சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தானின் சவாய்மாதோபூர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக இருப்பவர் மகேந்திரா ஜெயின். இவர் வழக்கம்போல பணியில் இருந்தபோது அங்கு வந்த சிலர், சரமாரியாக கன்னத்தில் அறைந்தனர்.
திடீர் தாக்குதலால் செய்வதறியாது தவிக்கும் அவரை, மேலும் மேலும் கடுமையான கோபத்தோடு அவர்கள் கன்னத்தில் அறைகின்றனர்.
ஒரு கட்டத்தில் அங்கு வரும் பொலிசார் மகேந்திரா ஜெயினை தாக்கியவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இது குறித்து கூறுகையில், மருத்துவர் மகேந்திரா ஜெயின், தன்னிடம் சிசிக்சைச்கு வரும் பெண்களிடம் கனிவாக பேசி சிகிச்சை குறித்து விளக்கம் அளித்து, பின்னர் அவர்களது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு, பேச ஆரம்பிப்பாராம். நாளடைவில் பின்னர் ஆபாசமாக பேச ஆரம்பிப்பராம்.
சில பெண்கள் இவரது பேச்சுக்கு செவி சாய்ப்பது உண்டு.
இந்த நிலையில் மருத்துவமனை பகுதியில் உள்ள ஒரு பெண்களுக்கு தொலைபேசியில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்ததால், அந்த பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் புகுந்து மகேந்திரா ஜெயினை இனி பேசுவியா, பேசுவியா என்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.
Average Rating