கள்ளக்காதல் மோகம் பெற்ற மகனை கொலை செய்த பாசக்கார தாய்… பிரியாணியால் வெளிவந்த உண்மை..!!
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹிரேகரூரை சேர்ந்தவர் வீரபத்ரா. இவரது மனைவி ரேகா. இருவருக்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 வயதில் மகன் இருந்துள்ளான்.
சில வருடங்களுக்கு முன்பு கணவனை விட்டு ரேகா பிரிந்து விட்டார். இதனை தொடர்ந்து தனிமையில் இருந்த ரேகாவுக்கு திம்மேகவுடா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் கள்ளகாதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களின் கள்ளக் காதலுக்கு மகன் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஒரே மகன் என்றும் பாராமல் கொல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்து கள்ளக்காதலன் திம்மேகவுடாவிடம் தெரிவித்துள்ளார். மகனை கொன்றால் நாம் எந்த பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம் என கூறி உள்ளார். அதன்படி திம்மேகவுடா கடந்த 2ம் தேதி சிறுவனை கடத்தி கொலை செய்து சோரடி குமுதவதி ஆற்றில் வீசி எறிந்துள்ளார்.
பின்னர் மகனை காணவில்லை என ரேகா நாடகமாடி உள்ளார். மகனின் சடலம் கிடைத்த உடன் எந்த விதமான அதிர்ச்சியும் காட்டாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தியபோது ரேகாவுக்கு திம்மேகவுடா என்ற கள்ளக்காதலன் உள்ளது தெரியவந்துள்ளது.
அவரிடம் போலீசார் பிரியாணி வாங்கி கொடுத்து விசாரித்தபோது ரேகாவின் மகனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். மேலும் தனது மகனை கொன்றால் எந்த இடையூறும் இல்லாமல் உல்லாசமாக இருக்கலாம் என ரேகா கூறியதையும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating