தாய், மகளை கற்பழித்த பொலிஸ் அதிகாரியின் மகன் கைது..!!

Read Time:2 Minute, 19 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)இந்தியாவில் விதவையான தாய் மற்றும் அவருடைய மகளை கொடூரமாக கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டில்லிக்கு அருகே உள்ள குருக்ராம் என்ற சிறிய நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 35 வயதான விதவை பெண் ஒருவர் 15 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இதே நகரில் வசித்து வந்த 23 வயதான ஆஷிஷ் குமார் என்ற நபருடன் தாயாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், நபரின் பழக்க வழக்கம் பிடிக்காததால் அவரிடம் பேசுவதை தாயார் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், 3 வாரங்களுக்கு முன்னர் தாயாரின் குடியிருப்பிற்கு சென்ற நபர் தாயாரை மிரட்டி கற்பழித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் இக்காட்சியை நபர் தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தாயாரை கற்பழித்த நபர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு நிலையில், 15 வயதான அவரது மகளையும் மிரட்டி கற்பழித்துள்ளார்.

மகளின் நிலையைக் கண்டு வேதனை அடைந்த தாயார் துணிச்சலாக பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற பொலிசார் வீட்டில் இருந்தபோது நபரை கைது செய்துள்ளனர்.

மேலும், அவரிடம் இருந்து 10 ஆபாச வீடியோக்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

ஆஷிஷி குமார் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலில் வைட்டமின் டி குறைந்தால் ஆபத்து..!!
Next post முதன் முதலாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்கனும்..!!!