நோன்பு இருந்த பெண்ணை காலால் எட்டி உதைத்த சக ஊழியர்..!!
கர்நாடகாவில் இஸ்லாமிய பெண் ஒருவரை சக ஊழியர் ஒருவர் தன் காலால் அடித்து உதைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ராய்ச்சூர் பகுதியின் சிந்தனுர் நகராட்சியில் வேலை செய்து வருபவர் நஸ்ரின்.
இவர் கடந்த சனிக்கிழமை அன்று வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வேலை செய்யும் சரணப்பா என்ற சக ஊழியர் அவரை காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதுதொடர்பாக நஸ்ரின் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து சரணப்பா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பொலிசார் கூறுகையில், சனிக்கிழமை விடுமுறை நாள் என்றபோதிலும், சில பணிகள் கிடப்பில் இருந்துள்ளதால், இருவரும் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
கணனி ஆபரேட்டராக தற்காலிக பணியில் சரணப்பாவும், அவருக்கு பணிகள் ஒதுக்கும் அதிகாரியாக நிரந்தர பணியில் நஸ்ரினும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்பு கடைப்பிடிப்பதனால் நஸ்ரின் பணிக்கு தாமதமாக வந்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் வாக்குவாதம் செய்த சரணப்பா ஆத்திரமடைந்து நஸ்ரினை காலால் எட்டி உதைத்து தாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
Average Rating