11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர்: வெளியானது சிசிடிவி காட்சிகள்..!!
அபுதாபியில் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
அபுதாபியில் உள்ள மசூதி ஒன்றில் Azan Majid Janjua என்ற 11 வயது சிறுவன் ஒருவன் மதியவேளையில் பிரார்த்தனைக்காக சென்ற போது திடீரென்று மாயமானான்.
அதன் பின் அவன் கடந்த 31-ஆம் திகதி அரைநிர்வாணத்துடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.
அப்போது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது Azan Majid Janjua பற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிறுவன் மாயமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், கருப்பு நிற புர்கா அணிந்த மர்ம நபர் ஒருவர் Azan Majid Janju-ஐ அங்குள்ள லிப்டின் கீழே அழைத்துச் செல்கிறார். அதன் பின் அச்சிறுவனும் மர்ம நபர் பின்னரே செல்கிறான்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், Azan Majid Janju அழைத்துச் சென்றது நிச்சயமாக பெண்ணாக இருக்க முடியாது, அது கண்டிப்பாக ஒரு ஆண் தான் என்று கூறியுள்ளனர்.
மேலும் சிறுவனின் தந்தை Majid Janjua கூறுகையில், அன்றைய தினம் அவன் வேகமாக மசூதிக்கு பிரார்த்தனைக்கு செல்வதாக கூறிச் சென்றான், அதன் பின் அவன் மாயமானான்.
இதைத் தொடர்ந்து கடந்த 31-ஆம் திகதி தங்களுடைய கட்டிடத்திற்கு ஏசி டெக்னீசியன் ஒருவர் வேலைக்காக வந்திருந்தார்.
அவர் தான் கட்டிடத்தின் மேல் பகுதியில் Azan Majid Janju இருப்பதை கூறினார், நாங்கள் சென்று பார்த்த போது அரைநிர்வாணமாக கிடந்தான் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பொலிசார் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
Average Rating