4 வருடங்களாக தூக்கமில்லாமல் தவிக்கும் இளம் பெண்: காரணம் என்ன?..!!
பிரித்தானியாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் சரியான தூக்கமில்லாமல் 4 வருடங்களாக அவதிப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் Nancy Lewendon (20) கல்லூரி மாணவியான இவர் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தன்னை சுற்றி ஏதோ பயங்கரமாக நடப்பது போல மற்றும் ஏதோ அசம்பாவிதம் தனக்கு நடப்பது போல நினைத்து அவர் பீதியில் உட்கார்ந்து கொள்வார். பின்னர், தானாக மெத்தையில் போய் Nancy படுத்து கொள்வார்.
இந்த விசித்திர பிரச்சனையுடன் தூக்கத்தில் நடக்கும் நோயும் அவருக்கு உள்ளது. More 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் Nancy அனுமதியுடன் அவர் உறங்கும் அறையில் ககெமராவை வைத்துள்ளது. அதில் அவர் இரவில் செய்யும் விசித்திர செயல்கள் பதிவுசெய்யப்பட்டு மக்களுக்கு ஒளிபரப்பப்பட்டுள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக Nancy இப்படி அவதிபட்டு வருகிறார்.
இது குறித்து Nancy கூறுகையில், எனக்கு 16 வயது இருக்கும் போது இந்த பிரச்சனை முதலில் ஏற்பட்டது. தூக்கத்திலிருந்து நான் முழித்த பின்னர், பயத்தில் அங்குமிங்கும் ஓடுவேன், என் இதய துடிப்பு வேகமாக அடிக்கும். பின்னர், நானே படுக்கையில் சென்று படுத்து விடுவேன் என கூறியுள்ளார்.
அதே போல தனக்கு இருக்கும் தூக்கத்தில் நடக்கும் நோயை பற்றி கூறிய Nancy, ஒரே இரவில் மூன்று முறை கூட தூக்கத்தில் எழுந்து என் அறையை சுற்றி நடப்பேன் என கூறியுள்ளார்.
இது குறித்து மருத்துவர் Guy Leschzine கூறுகையில், நமது மரபியல், மனதில் நினைக்கும் விடயங்கள், நாம் படுத்து கொள்ளும் அறை போன்ற விடயங்களால் இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த விடயத்தை முழுவதுமாக ஆராய்ந்ததில், இது போன்ற தூக்க குறைபாடுகளை தணிக்கவோ அல்லது குணப்படுத்தவோ முடியும் என தான் நம்புவதாக கூறியுள்ளார்.
Average Rating