பிச்சை எடுத்த கொமடி நடிகரின் தற்போதைய நிலை…!! (வீடியோ)
காதல் படத்தில் ஒரு நகைச்சுவை கொமடியில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் பல்லு பாபு, மனநலம் பாதித்து, சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுத்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகிவந்தது.
இப்படத்தில் இவர் பேசிய கொமடி வார்த்தையை இன்னும் இளைஞர்கள் இடைவிடாமல் உச்சரித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில், இவரின் பெற்றோர்களும் இறந்து போக, சென்னை எழும்பூருக்கு அருகிலிருக்கும் சூளை பகுதியில் ஒரு கோவிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இவரை பேட்டி எடுக்க வேண்டும் என விருப்பப்பட்டு, அவரை தேடி அலைந்த ஒரு பத்திரிக்கையாளர் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அந்த கோவிலில் கொடுக்கும் உணவை சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே இருந்துள்ளார். மேலும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் இருக்கிறார் என்று சிலர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் பல்லு பாபுவினை அழைத்து வந்த வில்லன் சாய் தீனா அவருக்கு உதவி செய்வதாக அழைத்துச் சென்றுள்ளார். இதோ அக்காட்சி…
Average Rating