மாமனாரின் வெறிச்செயல்… அண்ணன், தங்கையை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம்..!!
Read Time:51 Second
சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக அண்ணன், தங்கை இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த கோசலன் என்பவர் தனது மகன் விநாயகத்துடன் வசித்து வந்தார். விநாயகம் துரைப்பாக்கம் பகுதியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகனுக்கும், மருமகளுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மருமகளையும், அதனைத் தடுக்க வந்த அவரின் அண்ணனையும் வெட்டி கொலை செய்துள்ளார்.
Average Rating