சொந்த பேத்தியை வீட்டில் அடைத்து வைத்து தாத்தா செய்த வேலை ; பேத்தியின் முறைப்பாட்டை அடுத்து தாத்தா அதிரடி கைது..!!
வீட்டில் யாருமில்லாத நேரத்தில் 18 வயது பேத்தியை அடைத்து வைத்து, சொந்த தாத்தாவொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய கொடுமையான சம்பவமொன்று மும்பையில் இடம்பெற்றுள்ளது.
மும்பையில் தன்னுடைய தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்த 18 வயதுடைய பேத்தியின் மீது அவரின் தாத்தாவிற்கு ஆசை இருந்து வந்துள்ளது.இதனால், ஒரு நாள் பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த பெண்ணின் தாத்தா, அவரை பேத்தி என்றும் பார்க்காமல் வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், தொடர்ந்து அந்த பேத்தியை தாத்தா வீட்டுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.இரண்டு நாட்கள் கழித்து, தாத்தாவின் பிடியில் இருந்து தப்பித்த பேத்தி, தனது பெற்றோரை சந்திக்க சென்றுள்ளார்.
ரயிலில் சந்தேகத்துக்க இடமான முறையில் இருந்த குறித்த பேத்தியை பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.குறித்த விசாரணையில் தனது தாத்தா தன்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததை பேத்தி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த பெண்ணை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து பெற்றோரிடம் சேர்த்த பொலிஸார், குறித்த தாத்தாவையும் கைது செய்துள்ளனர்.
Average Rating