மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: திருமணத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட விபரீதம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 43 Second

625.183.560.350.160.300.053.800.330.160.90திருமண தினமன்று மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக ஹெலிகொப்டரில் சென்ற மணப்பெண் விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக திருமணத்திற்காக வந்திருந்த அனைவரும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தனர்.

பிரேசிலில், மணமகனான டமஸினோவுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காக ஹெலிகொப்டரில் சென்ற ரோஸ்மேரி டோ நாசிமெண்டோ சில்வா எனும் பெண்ணே 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த பெண் ஹெலிகொப்டரில் பயணித்த போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரோஸ்மேரி மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக திருமண தினத்தன்று ஹெலிகொப்டரில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் திருமணம் நடைபெறும் இடத்தினை அடைவதற்கு 15 நிமிடங்களே இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஹெலிகொப்டர் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மணப்பெண், மணப்பெண்ணின் அண்ணன் உட்பட நால்வர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மணமகளின் வருகைக்காக காத்திருந்த மணமகன் டமஸினோ செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து குறித்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அத்துடன் தீயணைப்பு வீரர்களும் அவ்விடத்திற்கு விரைந்து சென்று தீயினை அணைத்த போதும் அவர்களை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

ஹெலிகொப்டரில் காணப்பட்ட கோளாறு மற்றும் விமானியின் தவறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், ஹெலிகொப்டரில் மணப்பெண்ணின் அண்ணனே விமானியாக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் தற்போது வெளியாகியுள்ள காணொளி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரியா?- காஜல் அகர்வால் மறுப்பு..!!
Next post இந்தியா – சீனா: எல்லையில்லா எல்லைகள்..!!! (கட்டுரை)