விமான போக்குவரத்து வரலாற்றிலே மிகப்பெரிய மர்மம்..வெளியான புகைப்படம்..!!
அமெரிக்க நாட்டு புகழ் பெற்ற பெண் விமானியான Amelia Earhart’s பசுபிக் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் கருத்தை பொய்யாக்கும் வகையில் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஆவண காப்பகம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட கறுப்பு வெள்ளை புகைப்படம், இது குறித்த புதிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்படி, Amelia Earhart’s ஜப்பான் நாட்டில் உள்ள சிறையில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது உண்மையாகும் பட்சத்தில் விமான போக்குவரத்து வரலாற்றில் மிக பெரிய மர்மம் ஒன்று விடுவிக்கப்படும் என கூறப்படுகின்றது.
1937ம் ஆண்டு பசுபிக் கடலுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது Amelia Earhart’s காணாமல் போயிருந்தார். அவர் காணாமல் போயிருந்தமை இன்று வரையிலும் மர்மமாகவே இருந்து வருகின்றது.
தற்போது வெளியாகியிருக்கும் கறுப்பு வெள்ளை புகைப்படமானது ஜப்பானுக்கு சொந்தமான மார்ஷல் தீவுகளில் எடுக்கப்பட்டதாகும்.
துறைமுகம் ஒன்றில் குழு ஒன்று நின்று கொண்டிருப்பதை போன்று அந்த புகைப்படம் அமைந்துள்ளது. குறித்த புகைப்படத்தில் பின்புறமாக அமர்ந்திருப்பவர் Amelia Earhart’s என நம்பப்படுகின்றது.
இதேவேளை, Amelia Earhart’s விமானத்தில் உலகத்தை சுற்றி வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating