முதலையை திருமணம் செய்துகொண்ட நகர மேயர்: ஆச்சர்யமூட்டும் காரணம்..!! வீடியோ
மெக்சிகோ நாட்டில் உள்ள மீனவர்கள் தொழிலில் முன்னேற்றமடைந்து நலம்பெற வேண்டும் என்பதற்காக அந்நாட்டின் San Pedro Huamelula என்ற நகரத்தின் மேயர் huamelula victor என்பவர் முதலையை திருமணம் செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முதலைக்கு வெள்ளை நிறத்தில் உடை அணிவித்து அதன் வாய்ப்பகுதி துணியால் கட்டப்பட்ட பின்பு, Huamelula திருமணம் செய்து கொண்டார்.
ஏராளமான மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தின் இறுதியில் Huamelula முதலையை கையில் தூக்கிக் கொண்டு நடனம் ஆடியுள்ளார்.
இந்த முதலை திருமணமானது, அந்நாட்டுக் கலாச்சாரப்படி வருடா வருடம் மேயராக இருப்பவர் செய்து கொள்ள வேண்டுமாம்.
அப்படி செய்தால், அந்நாட்டு மீனவர்களின் தொழில் முன்னேற்றமடைந்து அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதுகுறித்து மேயர் Huamelula Victor கூறுகையில், இந்த சடங்குகள் மூலம் நல்ல அறுவடை அமைய நாங்கள் வேண்டுகிறோம்.
மேலும் கடலானது எங்களுக்கு தேவையான அனைத்து உணவுகளை கொடுக்க வேண்டும் எனவும், அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும் எனவும் கேட்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
Average Rating