இடியின் போது பூமிக்கு ஏலியன்ஸ் வந்ததா? பீதியில் மக்கள்..!! (வீடியோ)
ஹங்கேரியில் இடி இடித்த போது வானில் பயங்கரமாக சிவப்பு நிற ஒளி தோன்றியதை கண்ட மக்கள் ஏலியன்ஸ் பூமியில் தரையிறங்கியதாக நினைத்து பீதியடைந்துள்ளனர்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டிலே குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோவில், மழையுடன் பளிச்சென்று மின்னல்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் போது திடீரென பயங்கரமான சிவப்பு ஒளி ஒன்று தோன்றியுள்ளது.
இதை நேரில் கண்ட மக்கள் இடியின் போது ஏலியன்ஸ் பூமியில் தரையிறங்கியதாக பீதியடைந்துள்ளனர். இந்த நிகழ்வை பதிவு செய்த நபர் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வீடியோ குறித்து கருத்து பதிவு செய்த ஒருவர், தான் ஐந்து முறை அந்த ஒளியை கண்டதாகவும் ஒவ்வொரு முறையும் மின்னலுடன் ஏதோ தோன்றியதாகவும் கூறியுள்ளார்.
உள்ளூர் அதிகாரிகளோ அல்லது வல்லுநர்களோ உத்தியோகபூர்வமான விளக்கம் எதும் தராத நிலையில், சில மக்கள் தீப்பொறியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
Average Rating